முதலிரவில் மாப்பிளை வெறிச்செயல்!இயற்கைக்கு மாறான உறவு..அலறி துடித்த மணமகள்!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த ராஜ்குமார் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது. பின்னர் முதலிரவில் மணமகன் ராஜ்குமார், தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ராஜ்குமார் இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனை தாங்க முடியாத அந்த பெண், அலறி கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்த அவரின் தாய் கதவை தட்டி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது புதுப்பெண் உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே மாப்பிளை ராஜ்குமார் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தபோலீசார், தலைமறைவாகியுள்ள ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.