முதலிரவு அறையில் மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை!தெரிய வந்த திடுக்கிடும் உண்மை…

April 18, 2023 at 1:12 pm
pc

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கலைத்ததை மறைத்த விடயம் தெரிய வந்ததால், புதுமாப்பிள்ளை நியாயமான விசாரணையை கோரியுள்ளார்.

முதலிரவில் அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை 

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சமீபத்தில் திருமணமான நபர் ஒருவர், முதலிரவின் போது மனைவியின் வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது வயிற்றில் 7-8 தையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு மனைவியோ கீழே விழுந்ததில் அடிபட்டதால் தையல் போடப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால், புதுமாப்பிள்ளைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் புதுப்பெண்ணிடம் துருவி துருவி உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே காதலனால் கர்ப்பமான மணமகள்

அப்போது முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த மணமகன் தன் மனைவியை அவரது தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனைவியின் அனைத்து தகவல்களையும் மருத்துவமனையில் இருந்து சேகரித்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மணமகனின் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த மணமகன் தனக்கு நியாயமான விசாரணை வேண்டும் என சட்டத்தை அணுகியுள்ளார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website