முதியவரைக் கட்டி வைத்துஅடித்தே கொன்ற குடும்பத்தினர்!
ஒடிசா மாநிலம், கோராபும் மாவட்டத்திற்குட்பட்ட பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷா மணியக்கா. முதியவரான இவருக்கும் அவரது மகனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவர் வீட்டின் மேற்கூரையை உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அரவது மகன், மருமகள் என குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து முதியவரை கம்பத்தில் கட்டிவைத்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுக்காமல் முதியவர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.