முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் 95 வயதில்மரணம்- காலை பிடித்து கதறி அழுத்த ஓபிஎஸ்..

February 25, 2023 at 7:59 pm
pc

உடல் நலக்குறைவு காரணமாக 95 வயதில் காலமான தனது தாயின் முகத்தைப் பார்த்தும் தாயின் காலைப் பிடித்து கதறியும் ஓ.பன்னீர்செல்வம் அழுதார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரான ஓ.பழனியம்மாள் நாச்சியார்(95) கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக தேனியில் நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு, உடல்நிலை சற்று தேறியதும் வீடு திரும்பினார். 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஓ.பழனியம்மாள் நாச்சியார் நட்டாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் தாயை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு வந்தார். 

இதையடுத்து, நேற்று இரவு உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், அவரின் உயிர் நேற்று இரவு 10 மணி அளவில் பிரிந்தது.

தாயாரின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம்,  காலமான தனது தாயின் முகத்தைப் பார்த்தும், காலைப் பிடித்து கதறியும் ஓ.பன்னீர்செல்வம் அழுதார். தொடர்ந்து இறுதிச் சடங்குகளும் மரியாதைகளும் நடைபெற்றன. 

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. இவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website