முல்தானி மெட்டியை முடிக்கும் பயன்படுத்தலாமா …? இவ்ளோ நாள் தெரியாம போச்சே ….!!

October 18, 2022 at 5:17 pm
pc

முல்தானி மட்டி என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு மண் வகை ஆகும். இது களிமண் போல இருக்கக்கூடிய ஒரு மண். இது சருமத்தினுள் ஊடுருவி எண்ணெய் பிசுக்குகளை அகற்றி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. இது பெரும்பாலான பெண்கள் முக அழகிற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த முல்தானி மட்டியை முகத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடிக்கு கூட பயன்படுத்தலாம் என்கிறது சில ஆய்வு முடிவுகள். இதை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது?

முல்தானி மட்டி உலகெங்கும் வாழும் மக்கள் அழகிற்காக பயன்படுத்தி வருகின்றனர். நைசாக இருக்கும் இந்த மண்ணை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி உலர விட்டு முகத்தை கழுவினால் அது முகத்திற்குள் ஆழமாக ஊடுருவி சென்று எண்ணெய் பிசுக்குகளை அகற்றி, முகத்தை மாசு, மருவின்றி பளிச்சிட வைக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு சருமம் சார்ந்த பிரச்சனைகள் அண்டுவதில்லை

முல்தானி மட்டியுடன் வேறு சில பொருட்களையும் சேர்த்து பயன்படுத்தப்படுவது உண்டு. குறிப்பாக தயிர், பன்னீர், பால் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எந்த விதமான ரசாயன கலவைகளும் இல்லாத இந்த இயற்கையான முகப்பூச்சு முகத்திற்கு மட்டுமல்லாமல், தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.

தேவையான அளவிற்கு முல்தானி மட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து விடக்கூடாது. பேஸ்ட் போல கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இதை தலைமுடியின் வேர்க்கால் முழுவதும் தடவி ஐந்து நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு அப்படியே ஒரு 10 லிருந்து 15 நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு தலை முடியை நீங்கள் ஷாம்பு, கண்டிஷனர் என்று எதுவுமே பயன்படுத்தாமல் சாதாரண தண்ணீரால் நன்கு தேய்த்து அலசுங்கள். லேசாக நுரைக்க, முல்தானிமட்டி நீங்கும். இப்படி செய்யும் பொழுது உங்களுடைய தலை சருமத்திற்குள் இருக்கும் பாக்டீரியா தொற்றுகளை இது முற்றிலுமாக அகற்றும். கடுமையான பொடுகு பிரச்சனையையும் இது வேரோடு நீக்கிவிடும். அது மட்டும் அல்லாமல் தலைமுடிக்குள் சென்று எண்ணெய் பிசுக்களை அகற்றி தலையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பட்டுப்போல கேசத்தையும், தலைமுடி சார்ந்த பிரச்சினைகளையும் ரொம்பவும் எளிதாக நீக்கக்கூடிய இந்த முல்தானிமட்டி சிறந்த ஒரு ஷாம்பு ஆகவும் செயல்படுகிறது. இது சுத்திகரிப்பு வேலையை செய்வதால் தலைமுடியையும் சுத்திகரித்து ஈசியாக நம்மை தலைமுடி பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொடுக்கிறது. தலை முடியை நன்கு ஹைட்ரேட் செய்து இயற்கையாக எண்ணெய்கள் சுரப்பதை தடுத்து நிறுத்துகிறது. இதனால் பாக்டீரியா வளர்ச்சி தடைப்பட்டு, தலைமுடி சுத்தமாக எப்போதும் இருக்கும். மேலும் இது எண்ணெயை உறிஞ்ச கூடிய தன்மை உள்ளதால் எண்ணெய் பிசுக்குகள் அதிகம் உள்ளோர் இதை தாராளமாக பயன்படுத்தலாம் ஆனால் வறண்ட கூந்தல் இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இது உங்களுடைய தலைமுடியை வறண்டு போக செய்துவிடலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website