மூட நம்பிக்கை -புதையலுக்காக நரபலி ..குழிக்குள் இறந்து கிடந்த விவசாயி! சடலம் அருகே இருந்த அறுத்த கோழி, எலுமிச்சை, குங்குமம்

October 2, 2022 at 12:05 pm
pc

விவசாயில் மரணத்தில் அதிரடி திருப்பமாக அவர் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (52), விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் 1½ அடி ஆழ குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் இறந்து கிடந்தார். 

குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி கிடந்தது. லட்சுமணன் மரணம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் அவரின் நண்பர் மணி தான் கொலையாளி என தெரியவந்தது.

எனக்கு புதையல் ஆசை ஏற்பட்ட நிலையில் புதையலை எடுக்க நரபலி தர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் ராணி என்ற பெண் தனக்கு பேய் ஓட்டவேண்டும் என லட்சுமணனிடம் வந்தார். அதனால் அவரை பலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தோம்.

பின் புதையல் இருப்பதாக கூறப்படும் இடத்தில் 1½ அடிக்கு குழியும் தோண்டிய நிலையில் எதிர்பார்த்தபடி ராணி அங்கு வரவில்லை. அந்த நேரத்தில் புதையலை தான் மட்டும் அடைய வேண்டும் என நினைத்த லட்சுமணன் என்னை நரபலி கொடுக்கும் நோக்கத்தில் கழுத்தில் கடிக்க வந்தான்.

இதனால் சுதாரித்துக் கொண்ட நான் அவனை கொலை செய்து நரபலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தேன். அதன்படி கட்டையால் தலையில் அடித்து லட்சுமணனை கொலை செய்தேன். 

ஆனால் நரபலி கொடுத்தும் பூஜைகள் செய்தும் புதையல் கிடைக்கவில்லை என கூறினார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website