மெகாஸ்டார் சிரஞ்சீவி சமந்தாவுக்கு ஆறுதல்!!சமந்தாவின் உடல்நிலை பற்றி சோகத்தில் ரசிகர்கள்…

October 31, 2022 at 12:23 pm
pc

சமந்தா மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவை ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

சமந்தா

சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு மயோசிடிஸ் பிரச்சனை இருப்பது குறித்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் சமந்தா. அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

நாக சைதன்யா

சமந்தா வேதனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வார்த்தை ஆதரவாக பேசக் கூடாதா என்று அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமந்தாவின் போஸ்ட்டை பார்த்துவிட்டு உங்களின் தம்பி அகில் கமெண்ட் போட்டாரே. நீங்களும் அப்படி செய்யாதது ஏன் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.

சிரஞ்சீவி

சமந்தாவின் நிலைமை குறித்து அறிந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்வீட் போட்டார். அதை பார்த்த சமந்தா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி மட்டும் அல்ல ஜூனியர் என்.டி.ஆர்., துல்கர் சல்மான், காஜல் அகர்வால், ஹன்சிகா, ஜெனிலியா என்று பலர் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

மெகா குடும்பம்

மெகா குடும்பத்தில் இருந்து சமந்தா குணமடைய ஆளாளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் நாக சைதன்யா. சமந்தா என் மகள் போன்று என சொன்ன உங்களின் அப்பா நாகர்ஜுனா கூட கண்டுகொள்ளவில்லையே என சமந்தா ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website