மோடிக்கு உணவு தராதீர்கள் ! தமிழ் நடிகர் கிஷோர் ஆவேசம் .

February 22, 2024 at 7:43 pm
pc

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் பிரதமர் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்துங்கள் என தமிழ் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழ் நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விளைபொருளுக்கு நியாயமான விலை கேட்பது என்ன தவறா? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று கூறிய அரசியல்வாதிகள் விவசாயிகளை தேச துரோகிகள் போல் நடத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?

விவசாயிகளை தடுக்கும் நோக்கத்தில் சாலைகள் தோண்டப்பட்டன, தடுப்புகள் எழுப்பப்பட்டன, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, இதை எல்லாம் செய்தது மோடி அரசுதான், அதுமட்டுமின்றி அவர்களை தேசத்துரோகிகள் என்றும் பேச தொடங்கியுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிரான பொய்யான வதந்திகளை பரப்பும் பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் உணவு கொடுக்க கூடாது, நமது விவசாயிகளை தேச துரோகிகள் என்ற முத்திரை குத்துபவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்று நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website