மோடி போட்டோவை விசிறி எறிந்த திமுகவினர்..நியாய விலைக் கடையில்நடந்தது என்ன? வெடிக்கும் கலவரம் ..

May 12, 2022 at 2:08 pm
pc

நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய திமுகவைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில் உள்ள நியாய விலைக் கடையில் (KG015) பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல், முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர் படம் மட்டும் இருப்பதை கண்ட பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை நியாய விலைக் கடையில் மாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை நன்மங்கலம் ஊராட்சி திமுகவை சேர்ந்த சிலர் கழட்டி சேதப்படுத்தி கீழே வீசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தங்களையும், பெண் நிர்வாகிகளையும் நன்மங்கலம் ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நன்மங்கலம் ஊராட்சி திமுகவை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக செங்கல்பட்டு மாவட்ட பொது செயலாளர் ஹரிபாபு தலைமையில் 100 க்கும் மேற்பட் பாஜகவினர் பள்ளிகரணை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட பொதுச்செயலாளர் ஹரிபாபு கூறியதாவது: “ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அகற்றி சேதப்படுத்திய திமுகவினர் மீது தகுந்த நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட உள்ளோம். மேலும் தமிழத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாரத பிரதமரின் புகைப்படம் அமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website