ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை தீபா!

September 4, 2023 at 8:44 pm
pc

தமிழ் சின்னத்திரை நாயகிகள் இப்போது மக்களிடம் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். சீரியல் பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டனர், பிரபலங்கள் குறித்தும் நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். அப்படி சின்னத்திரையில் அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை தீபா.

தற்போது இவர் குறித்து ரகசியமாக வந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

சீரியல் நடிகை தீபாவிற்கு முதல் திருமணம் நடந்து ஒரு மகனும் உள்ளார், ஆனால் சில காரணங்களால் விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

முதல் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்ற நடிகை தீபா தற்போது சாய் கணேஷ் பாபு என்பவரை சில எதிர்ப்புகளால் ரகசியமாக பதிவு திருமணம் செய்துள்ளாராம். சாய் கணேஷ் நிறைய தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தில் பாபு என்று அழைப்பார்களாம். பாபு வீட்டில் தீபாவை மறுமணம் செய்ய நிறைய எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக மறுமணம் செய்துவிட்டார்கள் என்கின்றனர்.

தற்போது தான் தனது மறுமணம் குறித்து பதிவுகள் போட்டு வருகிறார் தீபா

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website