ரசிகர்களிடையே கொடிகட்டி பரந்த சில்க் ஸ்மிதா..!அவர் கடித்து போட்ட ஆப்பிள் எவ்வளவு விலை போனது தெரியுமா?

September 21, 2023 at 9:58 pm
pc

நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஒன்று ஏலம் விடப்பட்ட சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சில்க் ஸ்மிதா 

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் ஸ்மிதா, நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர்.

சிறுவயதிலேயே திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் அவர், நடிகை ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார்.

அப்படி தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகும், ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதா.

ஆப்பிளின் விலை

ஒரு படப்பிடிப்பின் போது, ஆப்பிளை கடித்துவிட்டு தனது அருகில் வைத்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. அங்கிருந்த ஒருவர் அதை எடுத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் அந்த ஆப்பிளை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார். அந்த ஏலத்தில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ரூ.200 வரை ஏலம் போனதாக தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த தகவலை தமிழ் திரைப்பட செய்தியாளர் பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். சில்க் கடித்த ஆப்பிள் ஏலம் போன சம்பவம் 1980-களில் நடந்தது.

அந்த ஆப்பிள் ஏலம் போனதும் அந்தக் காலத்தில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது” என்றார். அந்தளவுக்கு சில்க் ஸ்மிதா ரசிகர்களிடையே கொடி கட்டி பறந்திருக்கிறார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website