ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பிய செல்வராகவனின் பதிவு!!
துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்’ என செல்வராகவன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதை அடுத்து இந்த ட்வீட்டுக்கு என்ன அர்த்தம் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்தார் என்பதும் அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர் என்பது குறிபிடத்தக்கது.
அதன் பின்னர் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வைரலாகி வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் செல்வராகவன் அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவ மழை பொழிந்து வரும் நிலையில் திடீரென அவர் சமீபத்தில் பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது:
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம்.
நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ?
துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து செல்வராகவனின் இந்த டுவிட்டுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் செல்வராகவனின் சகோதரரும் நடிகருமான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்த நிலையில் செல்வராகவனின் இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.