ரசிகர்களை தெய்வங்கள் எனக்கூறி உருக்கமான நன்றியை தெரிவித்த ரஜினிகாந்த்!

October 5, 2024 at 12:10 pm
pc

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனை தரப்பில், “நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Transcatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், “நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், நலன் குறித்து விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கும் தனது நன்றியை கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website