“ரசிகர்கள் எல்லாம் நிரந்தரம் இல்ல” – யுவன் பேட்டி!

April 20, 2024 at 10:52 pm
pc

இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. பல திரைப்படங்கள் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தது யுவனின் இசை தான். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த whistle podu பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சிலர் யுவனை ட்ரோல் செய்தனர். யுவன் formout ஆகிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் யுவன் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், வாழ்க்கையில் எல்லாமே அடங்கி இருக்கு. நீங்கள் நண்பர்களை இழப்பீர்கள், ரசிகர்களை இழப்பீர்கள். குடும்பத்தை இழப்பீர்கள், பணத்தை இழப்பீர்கள் பின் பணத்தை தேடி போவீர்கள். வாழ்க்கை என்பது வட்டம்.

ஆனால் உங்கள் இதயம் நிலையா இருக்க வேண்டும். அதை எல்லாம் கையால வேண்டும். ஒரு சமயத்தில் நாம் பீக்கில் இருப்போம், அதன் பின் கீழே இருப்போம் இது தான் வாழ்க்கை என்று யுவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website