ரயில் நிலையத்தில் 30 வயது பெண்ணை சீரழித்த ரயில்வே ஊழியர்கள்!

July 24, 2022 at 8:33 am
pc

இந்தியாவில், புது டெல்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 30 வயது பெண் ஒரு கும்பலால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ரயில்வேயின் மின் துறை ஊழியர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை இரவு பிளாட்பாரத்தில் உள்ள ரயில் விளக்கு குடிசைக்குள் இந்த கூட்டு பலாத்காரம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், மற்றவர்கள் வெளியே காவலுக்கு நின்றதக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 35 வயதான சதீஷ் குமார், 38 வயதான வினோத் குமார், 33 வயதான மங்கள் சந்த் மற்றும் 37 வயதான ஜகதீஷ் சந்த் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ரயில்வே டிசிபி ஹரேந்திர சிங் கூறுகையில், அதிகாலை 3.27 மணியளவில் அந்த பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்தார். பொலிஸார் உடனடியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டனர் என்று தெரிவித்தார்.

அந்தப் பெண் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தான் வசிப்பதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வேலை தேடி வந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சதீஷை அவர் நண்பர் ஒருவர் மூலம் சந்தித்ததாகவும், அவர் தனக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வியாழன் அன்று, சதீஷ் அவளை அழைத்து தனது புதிய வீட்டில் தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தார். இரவு 10.30 மணியளவில் அந்த பெண் சதீஷை கிர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website