ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா முடிவு!

May 13, 2023 at 9:58 am
pc

ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்குச் சிறப்புத் தூதரை அனுப்பி அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. உக்ரேனிய நெருக்கடியின் அரசியல் தீர்வை இறுதி செய்யும் நோக்கத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்த வாரம் சீனாவால் சிறப்புத் தூதுவர் அனுப்பப்படுகிறார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதுவருமான லி ஹுய் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போரில் சீன அரசாங்கம் நடுநிலை வகிப்பதாக கூறுகிறது. ஆனால் சீன எப்போதும்போல வரம்புகள் இல்லாமல் ரஷ்யாவுடன் உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் அறிவித்தது. மேலும், உக்ரைன்-ரஷ்யா இடையே மோதலை நேட்டோவும் அமெரிக்காவும் தான் தூண்டுவதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.

இதனிடையே, உக்ரைனுக்காக சீன அரசாங்கத்தால் ஒரு சமாதானத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை ம் அது ரஷ்யாவின் தாக்குதல்களை நிறுத்தி அதன் துருப்புக்கள் உக்ரேனிய பிரதேசத்தில் இருந்து பின்வாங்கினால் மட்டுமே ஒரு தீர்மானத்தை எட்ட முடியும் என்று கூறும் உக்ரைன் ஆதரவாளர்கள் பெரிதும் நிராகரிக்கின்றனர்.

கடந்த மாதம், சீன அதிபர் ஜி ஜின்பிங் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார், அதன்மூலம் அமைதி பேச்சுவார்த்தைக்கான இராஜதந்திர உந்துதலுக்கான மேடையை அவர் நிறுவ முயன்றார்.

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்த வாரம் சீனாவால் சிறப்புத் தூதுவர் அனுப்பப்படுகிறார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website