ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை!போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்..

February 27, 2023 at 1:45 pm
pc

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மருத்துவ மாணவி ப்ரீத்தி, அதே கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர் முகமது சாயிஃப் என்பவரால் தொடர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தனது பெற்றோர் மூலம் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகாரும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி அனுப்பிவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதற்கு பிறகு தன் மீதே புகார் தெரிவிக்கிறாயா என்று கூறி ப்ரீத்தியை மீண்டும் மிரட்டியுள்ளார் முகமது.

மயங்கி கிடந்த ப்ரீத்தி!
இதனால் பெரிதும் மனஉளைச்சலுக்கும், பயத்திற்கும் ஆளான ப்ரீத்தி கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வளாகத்திற்குள் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீது இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சென்று மாணவியை பார்த்து வந்தார். ஆனால், அவரது ட்வீட்டில் மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார் ப்ரீத்தி. இதனால், தெலுங்கானா மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. ப்ரீத்தியை ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கிய முகமது சாயிஃபை தூக்கில் போட வேண்டுமென்றும், #JusticeForPreethi என்றும் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website