ராணியிடம் இருந்து பெறப்பட்ட 12 குதிரைகளை விற்க மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிவு!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து பாரம்பரியமாக பெறப்பட்ட 12 பந்தய குதிரைகளையும் மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து பாரம்பரியமாக பெறப்பட்ட சிறப்பாகச் செயல்படும் பந்தயக் குதிரைகள் அனைத்தையும் மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூ மார்க்கெட் டாட்டர்சல்ஸ் (Newmarket’s Tattersalls) நடைபெறும் ஏலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் 12 பந்தய குதிரைகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
1952ம் ஆண்டு மன்னர் நான்காம் ஜார்ஜ்-யின் மரணத்தை அடுத்து அவரால் வளர்க்கப்பட்ட குதிரைகள் பாரம்பரியமாக இரண்டாம் எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது, இதன் மூலம் குதிரை பந்தயத்தின் மீது ராணியின் எலிசபெத் காதல் அதிகரித்தது.
பிரித்தானியாவின் நீண்ட மாட்சிமை பொருந்திய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தால் கடந்த ஆண்டு மொத்தம் 37 குதிரைகள் பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்டது, அதில் 36 குதிரைகள் வெற்றி பெற்றதுடன் £590,000 பரிசு தொகையை ராணிக்கு பெற்றுத் தந்தது.
இந்நிலையில் மகாராணியின் மறைவிற்கு பிறகு சாண்ட்ரிங்ஹாமில் உள்ள 60 பந்தயக் குதிரைகள் மற்றும் 38 குட்டிகளையும் மன்னர் சார்லஸ் விரைவில் விற்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில் 30 குட்டிகள் புத்தாண்டுகளை ஒட்டி அதிக விலைக்கு விற்கப்படும் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு விற்கப்படும் குதிரைகளை வளைகுடா ஸ்டேட் யார்டுகள் புதிய மன்னரிடமிருந்து வாங்குவதற்கும், ராணியுடன் தொடர்பைக் கோருவதற்கும் குறிப்பாக ஆர்வமாக இருப்பதாக ஒரு பந்தய வட்டாரம் தெரிவித்துள்ளது.
நெருங்கிய ஆதாரம் அளித்த தகவலில் “மூன்று ஆண்டுகளில் தி ராயல் ஸ்டட் (The Royal stud) அருங்காட்சியகமாக இருக்கலாம், இது உண்மையிலேயே அவமானமாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.