ருசியான நாரத்தங்காய்பச்சடி நீங்களும் செய்து அசத்துங்க ….!!!
தேவையான பொருட்கள்…
நாரத்தங்காய் – ஒன்று,
தனியா – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு-ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்,
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
வெல்லம் – ஒரு சிறிய கட்டி,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை…
நாரத்தங்காயைக் நன்றாக கழுவி, தோலை தனியாக சீவி எடுத்து பொடியாக நறுக்கவும்.
முதலில் எள்ளை வறுக்கவும். பிறகு. தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, எள் சேர்த்து பொடி செய்யவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நாரத்தங்காயை போட்டு வதக்கவும்.
பிறகு புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த அரைத்த பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது… வயிற்றுப் புரட்டல், பித்தம் ஆகியவற்றை தணிக்கும்.