ரூ.1000 கோடி பட்ஜெடில் நாவலை படமாக்கும் ஷங்கர் -நாயகன் இந்த மாஸ் ஹீரோதான்…
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ மற்றும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் இயக்கயிருக்கும் படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி என்று கூறப்படுகிறது.
இந்தியன்2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய ’வேள்பாரி’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை எம்பி சு வெங்கடேசன் என்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா நாயகனாக ’வேள்பாரி’ கேரக்டரில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரூ.1000 கோடி செலவில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.