ரூ.22 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் ஆடை!

January 29, 2023 at 1:50 pm
pc

பிரித்தானிய இளவரசி டயானாவின் கவுன் நியூயார்க்கில் ரூ.22 கோடிக்கு ஏலம் போனது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுன்!

இளவரசி டயானாவின் மிகவும் பிரபலமான ஊதா நிற வெல்வெட் கவுன் வெள்ளியன்று நடந்த ஏலத்தில் 600,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.22 கோடி) விற்கப்பட்டது.

இந்த ஆடையானது முன்மதிப்பீட்டை விட 5 மடங்குக்கும் அதிகமான விலையைப் பெற்றது. இதன்முலம் இது பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுனாக மாறியது.

வடிவமைப்பாளர்

இளவரசி டயானாவின் இந்த ஆடையை 1989-ஆம் ஆண்டு இலையுதிர்கால சேகரிப்பின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார்.

விக்டர் எடெல்ஸ்டீன் இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தார், அவர் 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கினார்.

இந்த ஊதா நிற ஆடை முதன்முதலில் 1997-ல் 24,150 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த ஆண்டு இளவரசி ஏலம் விட முடிவு செய்த 79 காக்டெய்ல் மற்றும் மாலை ஆடைகளில் இதுவும் ஒன்று.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website