ரூ.3 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர் திருடிய 5 பேர்!!

May 4, 2022 at 1:21 pm
pc

ஆந்திர மாநிலம், சித்தூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பூதலபட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசிர்வாதம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரில் இருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.என். பாளையத்தை சேர்ந்த முரளி (வயது 40), சேகர் (39 ), கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சிவ ரெட்டி (32 ), இந்துவா வெங்கடசுப்பா (32), புல்லேறி கோபி (32) ஆகியோர் அதில் பயணித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏலூர், பூதலபட்டு, சித்தூர், முடிவேடு, கடப்பா, மண்ணூர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் இருந்து கம்ப்யூட்டர்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் திருடி சென்றனர்.
மேலும் இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ 3 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடியது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ரூ 70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள்,ரூ 1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website