ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர்!

December 30, 2022 at 8:25 pm
pc

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை பெறுவதற்கான டோக்கனை பெறாதவர்கள், வேறொரு நாளில், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வேலை, சொந்த காரணங்கள் உள்ளிட்டவற்றால், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருக்கும் பொது மக்கள், வேறொரு நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஜனவரி மாதம் 2 ஆம் தேதி, பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website