ரோஜா இதழ் போன்ற சிவந்த உதடுகளை பெற அற்புதமான டிப்ஸ்!
எல்லா பெண்களுக்கும் தனது உடலை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தான் நினைப்பார்கள். அந்த வகையில், முதல் இடத்தை பிடிப்பது உதடுகள் தான். ஒரு சில பெண்களுக்கு காபி, புகையிலை, டீ போன்ற பயன்பாடுகளால் உதடுகள் கருமையாக காணப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இயற்கையாகவே கருமையாக இருக்கும். அப்படி கருமையாக இருக்கும் பெண்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உதடுகளை சிவப்பாகவும், அழகானதாகவும் மாற்ற முடியும்.
அதுமட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் வறச்சி ஏற்படுவதுண்டு, இதனால் உதடுகள் வறண்டு வெடித்து விடும். இப்படி உதடு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய இயற்கை முறையை கையாழ்வது நல்லது. இப்போது, எந்தெந்த பொருட்களை பயன்படுத்தினால் சிவந்த உதடுகளை பெற முடியும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
டிப்ஸ் – 1
- ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும்.
- அதில் சிறிதளவு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் மென்மையாக தடவவும்.
- சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும்.
- ஒரு நாளில் 3 அல்லது 4 முறை தொடர்ந்து இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
டிப்ஸ் – 2
- உதடுகள் சிவப்பாக மாற மாதுளம் மற்றும் பீட்ரூட் மிகவும் உதவியாக இருக்கும்.
- பீட்ரூட் உதடுகளை சிவப்பாக்குவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
- பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் ரொம்ப சீக்கிரமாகவே கவர்ச்சியாக மாறும்.
டிப்ஸ் – 3
- பனிக்காலங்களில் உண்டாகும் உதடு வெடிப்புகளை போக்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்லாக்கி கொள்ளுங்கள்.
- அதனுடன் சிறதளவு வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு நீங்கி மென்மையானதாகவும், சிவப்பானதாகவும் மாறும்.
டிப்ஸ் – 4
- ஒரு கிண்ணத்தில் கேரட் ஜூஸை எடுத்து கொண்டு, அதில் காட்டன் பஞ்சை நனைத்து கொள்ளுங்கள்.
- பின்னர் அதை உதட்டிற்கு மேலே தடவி 20 லிருந்து 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
- இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி வெண்மையான உதடுகளை பெறலாம்.
இதில் எந்த வித கெமிக்கல் பொருட்களும் இல்லாததால் பயமின்றி பயன்படுத்தலாம்.