லஞ்ச்க்கு இப்படி கேரட் சாதம் செய்து கொடுங்க … குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க …!!
தேவையானபொருட்கள்
கேரட் கால் கிலோ
பாஸ்மதி ரைஸ் அரை கிலோ
பட்டை1
கிராம்பு2
ஏலக்காய்1
புதினாஒரு கைப்பிடி
பாதாம்4
முந்திரி4
காய்ந்த மிளகாய்3
நெய்ஒரு டீஸ்பூன்
கடுகுஒரு டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
மல்லித்தழைஒரு கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப
தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை
முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர; ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொhpந்ததும் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.
கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும். அரிசி மூழ்கும் அளவுக்கு சாறு இருந்தால் போதும், அதற்கேற்ப சாறெடுக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தலை தூவினால் கேரட் சாதம் ரெடி.