லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் குடும்பமே உயிரிழந்த சோகம்!! மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி குழந்தை பலி…
வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கணவன் , மனைவி மற்றும் இவர்களின் குழந்தை என மூன்று பேர் இறந்ததுடன் மற்றொரு குழந்தை ப்டுகாயமடைந்துள்ள பயங்கர விபத்து நகரின் கௌல் பஜார் மேம்பாலம் அருகில் நடந்துள்ளது. நகரை சேர்ந்த வீரேஷ் மற்றும் அவருடைய மனைவி அஞ்சலி மற்றும் மகன் தினேஷ் ஆகிய மூன்று பேர் இந்த விபத்தில் இறந்தவர்கள். மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்திருப்பதுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. வீரேஷ் , அஞ்சலி , இவர்களின் இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கௌல் பஜார் மேம்பால வீதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்பக்கமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் விளைவால் கணவன் மனைவி மற்றும் ஒரு குழந்தை இறந்ததுடன் மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்துள்ளது. லாரி ஓட்டுனரின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் உடனே விரைந்து வந்து பரிசீலனை செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.