லியோ அதிகாலை ஷோ அண்டை மாநிலத்தில் ரத்து .

October 17, 2023 at 6:38 pm
pc

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகாலை காட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பதும் நீதிமன்றம் தமிழக அரசிடம் 7 மணி காட்சிக்கு கோரிக்கை வைக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ‘லியோ’ படத்தை திரையிட தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. D ஸ்டுடியோ என்ற நிறுவனம் ‘லியோ’ படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் ‘லியோ’ படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் வெளியிட தடை விதித்துள்ளது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சனையை ‘லியோ’ படத்தின் குழுவினர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website