லீவில் தனியாக விடுதியில் தங்கியிருந்த மாணவர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம்!!

August 22, 2022 at 8:01 pm
pc

பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் அலோக் குமார் (19). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரபட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சி.எஸ்.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி அன்று செமஸ்டர் விடுமுறை என்பதால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஆனால் அலோக் குமாருக்கு சொந்த ஊர் செல்வதற்கு விமான பயணசீட்டு கிடைக்காததால் கல்லூரி நிர்வாகத்திடம் விடுதியிலேயே தான் தங்கி கொள்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்று கல்லூரி மீண்டும் திறக்கபட்டதால் மாணவர்கள் மீண்டும் விடுத்திக்கு திரும்பிய போது அலோக் குமார் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் அலோக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் அலோக்குமார் தூக்கிட்டு மூன்று நாட்கள் இருக்ககூடும் என்று தெரிவித்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விடுமுறை அன்று சொந்த ஊர் செல்வதற்காக விமான பயணசீட்டு கிடைகாததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமாக என பல கோணங்களில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website