வங்கியின் மனிதாபிமானமற்ற செயல்!இதைவிடவா கேவலமா நடத்த முடியும்?

April 12, 2022 at 3:14 pm
pc

விழுப்புரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக கூறி வாடிக்கையாளர்களை முட்டிப்போட வைத்து சேவை செய்து வரும் இந்தியன் வங்கி ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் நகரில் சேக்ரெட் ஹார்ட் கான்வெண்ட் என்ற பெயரில் (Indian Bank Sacred Heart Conventஇந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்வதாக கூறி, கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இடையே பெரிய தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கால் முட்டிக்கும் கீழே இருக்குமாறு ஒரு ஓட்டை பகுதியில் உரையாட வைத்துள்ளனர். இதற்காக வாடிக்கையாளர்கள் முட்டிப்போட்டுக்கொண்டு உரையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள், முதியோர்கள் என அனைவருக்கும் இதே நிலை தான். 

வங்கியின் மனிதாபிமானமற்ற இந்த செயல்பாடுகளை வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அனுபவித்து வந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் கால் முட்டிப்போட்டுக்கொண்டு வங்கி ஊழியரிடம் பேசிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் பெரிதாகவே, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் கொரோனா விதிமுறை என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த திரையை அகற்றியுள்ளது.

ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு வாடிக்கையாளர்கள் மீது செலுத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website