குடிபோதையில் பெண் செய்த அட்டுழியத்தை பாருங்க

January 22, 2021 at 11:58 am
pc

சென்னையை அடித்த திருவள்ளூரில் பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் ஜீப் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 21 வயது வட மாநில பெண் ஒருவர், போலீசாரிடம் வம்பு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

போலீஸ் பிடியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்கு போலீசிடம் ஆங்கிலத்தில் பேசி 21 வயது நித்து என்ற பெண் சேட்டை செய்துள்ளார். திருவள்ளூர் அடுத்தமேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்த நித்து, ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் புல் குடி குடித்துள்ளார்.

அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை வெளியே ஓட்டி வந்த நித்து, சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த டிராவலர் வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். போதையில் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச்செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களிடம் போதையில் வம்பிழுத்தார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

போதை தலைக்கேரிய நிலையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிய அந்தப்பெண் பிரிவினைவாதம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ் நாட்டிற்கே இனி வரபோவதில்லை என்று உளரிய குடிகார பெண் திட்டி தீர்த்துள்ளார். நண்பர்கள் சமாதானப்படுத்தியும் போலீசாரை எட்டித்தள்ளி வம்பிழுக்க கூடியிருந்த இளைஞர்கள் அவரை ரவுண்டு கட்ட ஆவேசமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போதையில் உளறிக்கொட்டிய அந்தப்பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர் போலீசார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website