வரதட்சணை கொடுக்காத விரக்தி.., மனைவியின் மூக்கை கடித்த கணவர்

December 23, 2023 at 8:40 am
pc

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி புகார்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22) என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் எனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவரின் செயல்

மேலும் அவர் தனது புகாரில், “எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 15 -ம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி என்னை எனது மாமியார் அடித்தார்.எனது கணவர் என் மூக்கை கடித்து காயப்படுத்தினார். வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.       

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website