வளர்ப்பு நாய்க்காக தகராறு: தாயும் மகளும் தற்கொலை…
வளர்ப்பு நாயை வேறு இடத்தில் கொண்டு சென்றுவிட மாமியார் சம்மதிக்காததால் இளம் பெண்ணும் மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் திவ்யா (36), அவரது மகள் ஹிருதய் (13). இவர்களது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இதனிடையே குடும்பத்தினருக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால், நாய் வளர்ப்பதை நிறுத்துமாறும், வேறு யாரிடமாவது ஒப்படைக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு வீட்டில் உள்ள மாமனார், மாமியார் சம்மதிக்கவில்லை.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவிந்தபுரா போலீசார் திவ்யாவின் கணவர் ஸ்ரீனிவாஸ், மாமியார் வசந்தா, மாமனார் ஜனார்த்தனன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். திவ்யா பல வருடங்களாக ஆஸ்துமா மற்றும் தோல் தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருவதாக திவ்யாவின் தந்தை எம்.கே. ராமன் கூறினார்.
மருத்துவரைப் பார்த்தபோது, நாய்களிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் கணவரின் குடும்பத்தினர் இதற்கு இணங்கவோ, வளர்ப்பு நாயை தவிர்க்கவோ தயாராக இல்லை. மன உளைச்சல் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை நடந்துள்ளது.