வாயில் போட்டதும் தேன் போல கரையும் சூப்பரான புது ஸ்வீட் ரெசிபி…
தேவையான பொருட்கள்:
பன்னீர்:
- முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டல்
- எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
மில்க் கேக்:
- பால் – 2 லிட்டர்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- பாதாம் பருப்பு – 5 (பொடித்தது)
- பிஸ்தா பருப்பு – 5 (பொடித்தது)
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளவும்.
சேர்த்த பின்னர் தொடர்ந்து கிளறவும், பால் திரிந்து வரும். அதை ஒரு சுத்தமான காட்டன் துணி போட்டு வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் சுத்தமான தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அலசவும்.
வடிகட்டிய பின்பு ஒரு தட்டில் வைத்து நன்றாக உடைத்து விடவும், இப்போது பன்னீர் ரெடியாகிடிச்சு. இப்போது மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு அகலமான நான்ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் வைத்து கொண்டு கிளறவும்.
பால் பாதியாக சுண்டி வரும், பின்னர் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு பால் கெட்டியாக தொடங்கும், அப்போது பன்னீரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர், அதில் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இப்போது பால் நன்றாக இளகி வரும், அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.
அதை மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவி மாற்றி லேசாக அழுத்தி கொடுக்கவும். அதன்மீது பொடித்து வைத்திருந்த பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பை சேர்த்து மீண்டும் ஒரு தடவி அழுத்தி விடவும்.
6 மணி நேரத்திற்கு பிறகு உங்களுக்கு வேண்டிய வடிவில் கட் செய்து சாப்பிடவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
இப்போது வாயில் வைத்ததும் கரையும் சுவையான மில்க் கேக் ரெடி…!! ட்ரை பண்ணி பாருங்க…