வாய்ப்பில்லை !!இவங்க சேரமாட்டாங்க போல… அது மட்டும் வேண்டாம்: தனுஷ், ஐஸ்வர்யா

October 9, 2022 at 2:46 pm
pc

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்கள்.

9 மாதங்களாக பிரிந்து வாழும் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேரப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லையாம்.

மீண்டும் சேர்ந்து வாழ தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் விருப்பம் இல்லையாம். மகன்களுக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டோம் என்கிறார்களாம்.

மகன்களுக்காக நேரம் ஒதுக்குவது, நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வது என்று அட்ஜஸ்ட் செய்ய தனுஷும், ஐஸ்வர்யாவும் தயாராக உள்ளார்களாம்.

முன்னதாக மூத்த மகன் யாத்ரா தன் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டன் ஆனபோது தனுஷும், ஐஸ்வர்யாவும் அதுவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து கலந்து கொண்டார்கள். மகனுடன் சேர்ந்து சந்தோஷமாக சிரித்த முகமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள்.

அதை பார்த்தவர்களோ, தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப் போகிறார்கள் போன்று என்று பேசினார்கள். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லையாம். தனித்தனியாக வாழும் வாழ்க்கை பிடித்துவிட்டதாம். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website