வார்த்தையே வரல, பயங்கர ஃபீலிங்கில் கார்த்தி: காரணம்…
படம் ரிலீஸான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. அதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். வந்தியத்தேவன் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று ட்வீட் செய்துள்ளார் கார்த்தி. மேலும் மணிரத்னம், அமரர் கல்கி, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ரவிவர்மன், சக கலைஞர்கள், தயாரிப்பாளர், ரசிகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.