விக்ரமனுக்கு வெற்றி வேண்டும்- கொந்தளிக்கும் மக்கள்…
பிக் பாஸ் 6 வீட்டில் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சண்டை போட்டு வந்தார் அசீம். அவரை விளாசினாலும் இந்த சீசன் கொஞ்சமாவது பார்க்கும்படியாக இருந்ததற்கு அசீம் தான் காரணம் என்றார்கள் பார்வையாளர்கள். இருந்தபோதிலும் அவருக்கு டைட்டில் கொடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தான் அசீமுக்கு டைட்டிலை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டார் பிக் பாஸ்.
விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என்று நேற்று தகவல் வெளியானது. ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அசீமை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். அதனால் கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு விபூதி அடித்துவிட்டு அசீமுக்கு டைட்டிலை கொடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியானது. இரண்டாவது தகவல் தான் உண்மையாகிவிட்டது.
அசீமுக்கு பிக் பாஸ் 6 டைட்டிலுடன் சேர்த்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அசீம் என்னத்த பெரிதாக செய்துவிட்டார் என்று அவருக்கு அல்டிமேட் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படியே அவரை பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க வைக்க நினைத்தால் தாராளமாக செய்யட்டுமே. அதற்கு எதற்காக அவருக்கு போய் டைட்டிலை கொடுத்திருக்கிறார்கள் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோபப்பட்டு சண்டை போட்டாலும் அசீம் மனதில் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. கேம் சுவாரஸ்யமாக இருந்ததற்கு அவர் தான் காரணம். இதை எல்லாம் பார்த்துவிட்டு தான் அசீமுக்கு டைட்டிலை கொடுத்திருக்கிறார்கள். இது புரியாமல் அறம் வெல்லும் ஆதரவாளர்கள் வயித்தெரிச்சலில் கதறுகிறார்கள் என அசீம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அசீம் வெற்றி பெற்ற ட்வீட்டை பார்த்த முன்னாள் போட்டியாளரும், நடிகையுமான காஜல் பசுபதி கூறியிருப்பதாவது, எங்கேயுமே நல்லவங்களா உண்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சமூகம் என தெரிவித்துள்ளார். காஜலின் ட்வீட்டை பார்த்த பலரும் அவரை பாராட்டியுள்ளனர். சரியாக சொன்னீர்கள் அக்கா, பிக் பாஸின் மோசமான முடிவு என்கிறார்கள்