விஜயகாந்துக்கு கொரோனா: வெண்டிலேட்டர் சிகிச்சை!

December 28, 2023 at 7:28 am
pc

மருத்துவ பரிசோதனைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் பரிசோதனை முடிந்து இன்று (டிசம்பர் 28) வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் வெண்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

இந்நிலையில் நவம்பர் இறுதியில் உடல்நிலை மிகவும் நலிவடைந்த நிலையில் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து அவருக்கு சிகிச்சை வழங்கி வந்தன. டிசம்பர் 12ஆம் தேதி அவர் நலமடைந்து வீடு திரும்பினார்.

அதன்பின்னர் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களைச் சந்தித்தார். நீண்ட நாள்கள் கழித்து விஜயகாந்தை பார்த்த அவரது தொண்டர்கள் உற்சாகமாகினர். அதே சமயம் உடல் மெலிந்து காணப்பட்ட விஜயகாந்தை பார்த்து மிகவும் உருகினர். ஏன் இந்த நேரத்தில் அவரை வெளியே அழைத்து வந்தீர்கள் என்று விமர்சனங்களும் எழுந்தன.

இந்த சூழலில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website