விஜய்க்கு போட்டியாக சூர்யா இப்படி செய்தாரா?

தேர்வில் அதிகம் மார்க் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் விஜய். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொருவராக விஜய் பரிசு கொடுத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அதுக்காக அவர் மேடையில் 13 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததை பலரும் பாராட்டினார்கள்.
அதே நேரத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் தான் இந்த உதவியை செய்கிறார் என ஒரு தரப்பு விமர்சித்தும் வருகிறது.
இந்நிலையில் விஜய் மாணவர்களுக்கு விழா நடத்திய அதே நாளில் நடிகர் சூர்யாவும் தான் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் மாணவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு பற்றி எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை.
சூர்யா கடந்த பல வருடங்களாக வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு படிக்க உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.