விஜய் தேவரகொண்டாவின் திமிரால் படம் ஓடல: பிரபல தியேட்டர் உரிமையாளர் விளாசல்…

August 28, 2022 at 1:31 pm
pc

விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சால் லைகர் படம் தோல்வி அடைந்ததாக தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லைகர்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த லைகர் படம் ஆகஸ்ட் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ரூ. 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் செய்யப்பட்டது. பட ரிலீஸுக்கு முன்பே அதை புறக்கணிக்குமாறு சமூக வலைதளவாசிகள் தெரிவித்தனர். இதை பார்த்த விஜய் தேவரகொண்டா காட்டமாக பேசியிருந்தார்.

கிண்டல்

லைகர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். படத்தில் விஜய்யின் நடிப்பை தவிர ஒன்றுமே இல்லை என்கிறார்கள். இந்நிலையில் மும்பையில் இருக்கும் கெய்ட்டி கேலக்ஸி, மராத்தா மந்திர் சினிமா ஆகிய இரண்டு பிரபலமான தியேட்டர்களின் உரிமையாளரான மனோஜ் தேசாய் விஜய் தேவரகொண்டாவை விளாசியுள்ளார்.

அனகொண்டா

மனோஜ் தேசாய் கூறியிருப்பதாவது, என் படத்தை புறக்கணியுங்கள் என்று எதற்காக சொல்ல வேண்டும். அதை ஓடிடியில் கூட யாரும் பார்க்க மாட்டார்கள். விஜய்யின் இந்த செயலால் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. மிஸ்டர் விஜய், நீங்கள் தேவரகொண்டா தான் அனகொண்டா இல்லை. அனகொண்டா போன்று பேசி வருகிறீர்கள். ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது மனம் தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வார். அதை நான் நீங்கள் செய்கிறீர்கள் என்றார்.

திமிர்

மிஸ்டர் விஜய், உங்களுக்கு திமிர் இருக்கிறது. படம் பாருங்கள், பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள் என்று சொன்னதன் விளைவை பார்த்தீர்களா?. ரசிகர்கள் படம் பார்க்காவிட்டால் என்னவாகும் என்பதை டாப்ஸி, ஆமீர் கான், அக்ஷய் குமார் ஆகியோரின் கஷ்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என மனோஜ் தேசாய் மேலும் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website