விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு..!

March 19, 2024 at 9:32 pm
pc

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் சென்றதாகவும் அவரை வரவேற்கவும் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று விஜய் திருவனந்தபுரம் சென்றார்.அவரை வரவேற்க திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தாராளமான விஜய் ரசிகர்கள் கூடி இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் கூடி இருப்பதாகவும் தெரிகிறது.

திருவனந்தபுரம் மைதானத்தில் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சில நாட்கள் படமாக்கப்பட இருப்பதாகவும் அதற்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் கூடிய நிலையில் தற்போது திருவனந்தபுரத்திலும் அவருக்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து மலையாள திரை உலகினரே ஆச்சரியப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website