விடுதியில் பெண்கள் குளிக்கும் வீடியோவை டாக்டருக்கு அனுப்பிய மாணவி கைது.. மதுரை பகீர் சம்பவம்!

September 26, 2022 at 11:03 am
pc

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் ஆஷிக் (31). இளநிலை மருத்துவம்(MBBS) படித்து முடித்துவுிட்டு கமுதியில் உள்ள முஸ்லீம் பஜாரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். மருத்துவர் ஆஷிக்கிற்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 

ஆஷிக் நடத்தி வரும் கிளினிக் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி தனியார் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வருகிறார்.

மருத்துவர் ஆஷிக் – காளீஸ்வரி இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் காளீஸ்வரி, விடுதியில் உள்ள மற்ற பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து ஆஷிக்கிற்கு அனுப்பி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காளீஸ்வரி புகைப்படம் எடுப்பதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் கூறியுள்ளார். பின்னர் காளீஸ்வரி செல்போனை பறித்து ஆராய்ந்தபோது அதில் பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் காளீஸ்வரி அந்த வீடியோக்களை மருத்துவர் ஆஷிக்கிற்கு அனுப்பியது உறுதி செய்யப்பட்டது இதனால், ஆஷிக் மற்றும் மாணவி காளீஸ்வரி ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வட இந்தியாவில் உள்ள சண்டீகரில் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரையிலும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website