விதவை பெண்ணை தூக்கி சென்று கொடூரமான முறையில் இரவு 11 மணி வரை கூட்டு பாலியல் பலாத்காரம் …!!-நாமக்கல் கொடூரம்…

May 22, 2022 at 3:07 pm
pc

நாமக்கல்லை சேர்ந்த 29 வயது விதவைப் பெண் ஒருவர், திருச்செங்கோட்டை சேர்ந்த அவரது நண்பர் ஒருவருடன் கடந்த 19-ந் தேதி, நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இருவரையும் மிரட்டி 1¼ பவுன் செயின் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பறித்துள்ளது. 

மேலும், இருவரையும் அந்த கும்பல் தாக்கியதோடு மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் பயனற்று இருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளது. பின்னர் அந்த கட்டிடத்தில் வைத்து பெண்ணை கொடூரமான முறையில் இரவு 11 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதை அந்தப் பெண்ணின் ஆண் நண்பருடைய செல்போனை பறித்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அதே போனில் வீடியோ பதிவு செய்துள்ளது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 21), வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (21), பெயிண்டர் முரளி (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோர் விதவைப் பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் தலைமறைவாக உள்ள வல்லரசை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே நவீன்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website