விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு!

December 12, 2022 at 9:47 am
pc

தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வரி செலுத்துபவர்களும் பிஎம் கிச்சன் திட்டத்தில் பயன்பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும்.

மக்களின் வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டால் அதற்கு வரி தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வரி தாக்கல் செய்வதற்கு பல்வேறு வரி அடுக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் வரி தாக்கல் செய்து பிஎம் கிசான் திட்டத்திலும் பயன்பெற்றால் அத்தகைய விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்படலாம். இந்நிலையில் தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசால் பணம் அனுப்பப்படுகிறது. மேலும் தகுதியற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் தொகை வந்தால் அந்த விவசாயிகள் தொகையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தாங்களாகவே ஆதார் என்னை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்களது விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website