விஸ்வரூபம் எடுக்கும் சிவகார்த்திகேயன்-இமான் பிரச்சனை!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெண் ரசிகைகள் குடும்ப ரசிகர்கள் அதிகம். தற்பொழுது அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்திற்காக மிகப்பெரிய பொருட்செலவு செய்யப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் என்றால் அது அயலான் திரைப்படம் தான் என்று கூறுகிறார்கள்.
2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் பற்றி சமீபத்தில் வெளியான ஒரு தகவல் ரசிகர்களை பதற வைத்தது என்று தான் கூற வேண்டும்.
சிவகார்த்திகேயனை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இதனால் அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றனர். இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.
மேலும் அவருடன் இனிமேல் படங்களில் பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இதனை சுற்றி சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ன என பல பத்திரிகையாளர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நம்ம வீட்டுப் பிள்ளையாக பழகிய சிவகார்த்திகேயன் இப்படிப்பட்ட நபரா..? என்று சிவகார்த்திகேயன் ரசிகைகள் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.
இதிலிருந்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் எந்த அளவுக்கு அடி வாங்க இருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. கண்டிப்பாக சிவகார்த்திகேயன் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அதற்கான மவுசு குறைந்து காணப்படும்.
சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன், நாங்க பிரியக்கூடாது-ன்னு தான் அவர் ஆசைப்பட்டார். என்று சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.
இனிமேல் பெண்களுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் ஏதேனும் கருத்தை பேசினால் மோசமான பின் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும். இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது சிவகார்த்திகேயன் ஒருவேளை அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மறைந்திருக்கும். ஆனால், தன்னுடைய கூலிப்படையை ஏவி, தான் செய்த செயலை மறைக்கும் விதமாகவும் இமானின் இமேஜ்-ஐ டேமேஜ் செய்யும் விதமாகவும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
அதுதான் அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக வந்து நிற்கிறது. எல்லாவற்றையும் மறைத்து விடலாம். ஆனால் சிவகார்த்திகேயனின் ஆடியோ, சாட்டிங் ஆதாரங்கள், சிவகார்த்திகேயன் இமான் போனில் பேசிய ஆதாரம், இமானின் முதல் மனைவியுடன் சிவகார்த்திகேயன் ஃபோனில் அரங்கேற்றிய ஆபாச உரையாடல்கள் என அனைத்து ஆதாரங்களும் இமானிடம் இருக்கும்போது சிவகார்த்திகேயனால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பத்திரிகையாளர்.
இமானிடம் இந்த ஆதாரங்கள் எல்லாம் கையில் இருக்கிறது. இதனை இமானுக்கும், எனக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் உறுதிபட தெரிவித்துள்ளார். விரைவில் இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.