வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்து இளைஞர் பலி!

May 22, 2022 at 1:34 pm
pc

சென்னை கோயம்பேட்டில வி ஆர் மாலில் மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கிய இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள வி ஆர் மாலில் நேற்று இரவு மது விருந்து நடைபெற்றது. 

இந்த விருந்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (23) மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகிவிட்டார். 

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீஸார் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விக்னேஷ் சின்னதுரை, மார்க் பாரத் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website