வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை அடித்தே கொன்ற வளர்ப்பு தந்தை!

August 17, 2022 at 6:12 am
pc

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவரது மகன் சுப்ரீத் (7). தனியார் பள்ளியில் படித்து வந்தான். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 3 ஆண்டுகள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள், பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர். இதையடுத்து ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதத்திற்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டு, அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிறுவன் சுப்ரீத்திற்கு உமேஷ் வீட்டுபாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் உமேஷ் கூறியப்படி சரியாக வீட்டுபாடம் எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

அதைபார்த்து ஆத்திரம் அடைந்த உமேஷ், சிறுவனை அடித்து உதைத்தார். மேலும் கீழே தள்ளினார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடினான். இந்நிலையில் மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆஷா உடனே அவனை சக்லேஷ்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

இதையடுத்து பெங்களூருவிற்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான். இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து உமேசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website