வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டு இருப்பது திருஷ்டி கயிறு அல்ல…. நம் உயிரை காக்கும் அது முதலுதவி பெட்டகம்…!!

July 1, 2022 at 2:38 pm
pc

நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம். எலுமிச்ச்சைபழம், மிளகாய், மிளகு, ஈச்சமுள் மற்றும் மஞ்சள், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும்.
கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

மின் வசதியில்லாத காலங்களில் நம் வீடுகளீல் இரவில பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும். இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது… அப்பொழுது ஏதேனும் பூச்சியோ அல்லது பாம்பு மற்ற ஏதேனும் விஷபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது. அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?

அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.
கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விஷம் மேலும் பரவாமல் இருக்க கயிற்றால் கட்டிவிடுவதால் விஷம் பரவுவதை தடுக்கலாம்.


கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் படிகாரத்தை தேய்த்துவிடுவதால் எரிச்சல்குறையும்,
விஷக்கடியாக இருந்தால் மிளகாய் அல்லது மிளகு கடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விஷக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்துகொள்வார்கள்.

கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தை பிழிந்துகொடுப்பார்கள்
எந்தமாதிரியான விஷக்கடி என்பதை அறிய ஈச்சமுள்ளால் அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்துகொள்வார்கள்.
எட்டுகால் பூச்சி போன்றவை கடித்தால் தேங்காய் தண்ணிரும் தேங்காய்கீத்தையும் தின்றால் உடனடி விஷமுறிவு ஏற்படும்
சாதாரண ரத்தகட்டி வீக்கமாக இருந்தால் மஞ்சள் தடவி விடுவார்கள். இது தான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
தொங்கிக்கொண்டு இருப்பது மூடநம்ம்பிக்கை சின்னம் அல்ல. முதலுதவி பெட்டகம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website