வெயில் காலத்தில் ஆரோக்கியமான உணவு!! ஜவ்வரிசி மோர்க்களி எப்படி செய்யலாம்?
வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது அனைவரினதும் வழக்கம் தான். அதற்காக ஆரோக்கியமற்ற உணவை செய்து சாப்பிடக்கூடாது.
ஆகவே வீட்டிலே சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி மோர்க்களி எப்படி செய்யலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மாவு ஜவ்வரிசி, தயிர் – தலா 200 கிராம்
- கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
- மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு - மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் மணிநேரமாவது ஜவ்வரிசியை தயிரில் ஊறவைக்க வேண்டும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து எடுக்க வேண்டும்.
- பிறகு தாளித்ததுடன் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்டே கொத்தமல்லி தூவி இறக்கவும்.