வெள்ளரிக்காயை இந்த பொருளுடன் சேர்த்து பேக் போடுங்கள். அப்புறம் பாருங்க உங்க முகத்தை நீங்களே ரசிக்க அரம்பீச்சிடுவீங்க!!

January 25, 2023 at 7:01 am
pc

முகம் எப்பொழுதும் பார்க்க பளிச்சென்று பிரகாசமாக இருந்தால் தான் நமக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். இன்றைய சூழலில் அப்படி முகத்தை பராமரிப்பது எல்லாம் மிகவும் கடினமான காரியம். வெயில், தூசி போன்றவற்றால் முகம் கறுத்து பொலிவிழந்து விடும். அப்படியான முகத்தைக் கூட நல்ல பொலிவுடன் மாற்ற இந்த ஒரு கிரீமை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும் உங்கள் முகம் எப்போதும் பளிச் சென்று இருக்கும். இந்த அழகு குறிப்பு பதிவில் அது என்ன க்ரீம், எப்படி செய்வது என்பது எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த கிரீமை தயாரிக்க நமக்கு தேவை வெள்ளரிக்காய் ஒரு சிறிய துண்டு, கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் இது மட்டும் தான். வாங்க இப்போ இந்த கீரிம் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.


முகத்தை வெள்ளையாக மாற்றும் கீரிம் தயாரிக்கும் முறை:


இந்த கிரீம் தயாரிக்க முதலில் வெள்ளரிக்காய் எடுத்து காய் சீவும் சீவலில் நன்றாக சீவி சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கற்றாழை ஜெல்லாக கிடைத்தாலும் பயன்படுத்தலாம் அல்லது வீட்டில் கற்றழை செடி இருந்தால் அதையும் எடுத்து சுத்தப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஒரு சின்ன பவுலில் வெள்ளரிக்காய் சாறு இரண்டு டீஸ்பூன், கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், இரண்டையும் முதலில் நன்றாக கலக்க வேண்டும். இப்படி கலக்கும் போது அது ஒரு லிக்விட் பதத்திற்கு மாறி விடும். அதன் பிறகு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முதலிலேயே தேங்காய் எண்ணெய் ஊற்றினால் அது கிரீம் பதத்திற்கு வராது. தேங்காய் எண்ணெய் சேர்த்த பிறகு மூன்றையும் சிறிது நேரம் நன்றாக கலந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்தால் ஒரு கிரீம் பதத்திற்கு வந்து விடும். இதை ஒரு சின்ன பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


தினமும் இரவில் படுக்க செல்லும் முன் முகத்தை நன்றாக அலம்பிய பிறகு ஒரு காட்டன் துணி வைத்து முகத்தை துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கிரீமை எடுத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள்.


இதை தேய்க்கும் போது கண்களை சுற்றி கருவளையங்களும், சண் டேன் இருந்தால் அந்த இடத்தில் மட்டும் இரண்டு நிமிடம் லேசாக மசாஜ் செய்து கொடுத்தால் போதும். அப்படி எதுவும் இல்லை என்றால் சாதாரணமாக இந்த கிரீமை முகத்தில் அப்ளை செய்த பிறகு அப்படியே உறங்க சென்று விடலாம் முகத்தை அலம்ப வேண்டிய அவசியம் இல்லை.


மறுநாள் காலையில் முகத்தை அலம்பி விட்டால் போதும். முகம் அலம்பும் போதே நல்ல மாற்றம் தெரியும். கருவளையம் அதிகமாக இருந்தால் கூட, இந்த முறையில் பத்தே நாட்களில் அனைத்தும் மறைந்து முகத்தில் ஒரு சின்ன கரும்புள்ளி கூட இல்லாமல் முகம் முழுவதும் வெள்ளை வெளேர் என்று அழகாக இருக்கும். செலவே இல்லாத இந்த கிரீமை நீங்களும் உங்கள் வீட்டிலே செய்து ட்ரை பண்ணி பாருங்க உங்க முகமும் பிரகாசமாக மாறும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website