வேன் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உடல் நசுங்கி பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி படூர் கிராமத்திலிருந்து, திருமண பெண் வீட்டார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மினிவேனில், 25 பேர் வேளச்சேரியை நோக்கி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தனர். திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்ததில், அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோகுல் (14), அஜித் (17) உடல் நசுங்கி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். சபிதா (12) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.